• Latest News

    April 08, 2014

    ஆட்டம் கண்டுள்ள அரசாங்கத்தின் வேரை நாமே பிடுங்கி எடுப்போம்: JVP

    ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்றவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ளலாம். ஆனால் ஜே.வி.பி.க்கு துரோகம் செய்து விட்டு சென்றவர்களை ஒரு போதும் நாம் இணைத்துக்கொள்ளமாட்டோம் என ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் கொல்லப்பட்ட அக்கட்சியின் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
    பதுளை தபாலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க விஜித ஹேரத், லால்காந்த, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரத்ன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
    இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள  ரில்வின் சில்வா அரசாங்கத்தின் வேர் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஜே.வி.பி.யே தவிர ஐ.தே. கட்சியல்ல. ஆட்டம் கண்டுள்ள அரசாங்கத்தின் வேரை நாமே பிடுங்கி எடுப்போம்.
    ஐ.தே. கட்சி கூறி வருவது போல் நாம் யாருடனும் கூட்டு சேரப்போவதில்லை. ஐ.தே. கட்சியுடன் எமக்கு எந்த உறவும் இல்லை. ஜே.வி.பி. 1971 ஆம் ஆண்டு ஏப்­ரலில் எமது கட்­சிக்­காக உயிர்­நீத்த வீரர்கள் எதிர்­பார்த்த பிரார்த்­த­னையை நோக்கி நகர்ந்து கொண்­டுள்ளோம். அவர்கள் அன்று கண்ட கனவு நன­வாகும் காலம் மிக தொலைவில் இல்லை.
    தென் மேல் மாகாண தேர்­தலில் அர­சாங்கம் பாரிய பின்­ன­டைவை எதிர்­நோக்­கி­யுள்­ளது. தென் மாகா­ணத்தில் சுமார் ஒரு லட்சம் வாக்­கு­க­ளாலும் மேல் மாகா­ணத்தில் ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் வாக்­கு­க­ளாலும் பின்­ன­டைவை எதிர்­நோக்­கி­யுள்­ளது. தென் மாகாணம் ஜனா­தி­ப­தியின் கோட்டை. அம்­பாந்­தோட்டை அதில் முக்­கி­ய­மாகும். அங்­கேயும் பாரிய பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. மேல் மாகாணம் அர­சாங்­கத்தின் இதயம் அங்­கேயும் அர­சாங்கம் ஆட்டம் கண்­டுள்­ளது.
    அர­சாங்­கத்­துக்கு தூர நோக்கு இல்லை. எங்கே செல்­கின்­றார்கள் என்­பது அவர்­க­ளுக்கே தெரி­யாது. குறிக்கோள் இல்லை. மக்களை பாதாள பகு­தியில் அர­சாங்கம் தள்­ளி­யுள்­ளது. அர­சாங்­கத்தின் சரி­வுக்­காலம் தொடங்­கி­யுள்­ளது. மேல் தென் மாகா­ணங்­களில் கடைசி துரும்­பாக ஜெனீவா பிரச்­சி­னையை முன்­வைத்­தார்கள். ஆனால் அதுவும் மக்கள் மத்­தியில் எடு­ப­ட­வில்லை.
    1971 ஆம் ஆண்டு பின்­ன­டைந்த நாம் 1976 இல் மீண்டும் எழுந்தோம். அதே­வேளை மீண்டும் 1988, – 89 களில் மீண்டும் சரிவு நிலைக்குச் சென்றோம்.பின் 1994 இல் மீண்டும் முன்னோக்கிப் புறப்பட்டோம். அது 2008 இல் மீண்டும் சறு
    க்கி விட்­டது. இந்­நி­லையில் 2014 இல் மேல், தென் மாகாண சபை தேர்­தலில் எழுந்துள்ளோம் என தெரிவித்துள்ளார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆட்டம் கண்டுள்ள அரசாங்கத்தின் வேரை நாமே பிடுங்கி எடுப்போம்: JVP Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top