• Latest News

    July 15, 2014

    விமல்வீரவன்சவின் புதிய கண்டுபிடிப்பு! தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகள் தீவரவாதத்தை பரப்புகின்றன

    வாக்குகளை பெறுவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சமூகங்கள் மத்தியில் தீவிரவாத கருத்தியல்களை பரப்பி வருவதாகவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் வெற்றி பெற இன மற்றும் மதவாதத்தை பயன்படுத்தும் முறையை நிறுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிடாமல் வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ள முயற்சித்து வருகின்றனர்.
    தமிழ் மக்களின் வாக்குகளை தற்காத்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட இனவாதத்தை ஊக்குவித்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இலங்கையில் தேர்தலில் வெற்றிபெற முடியும்.

    இந்த செயற்பாடுகளால் இறுதியில் நாடு சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழும். இது நடக்காமல் இருப்பதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விமல்வீரவன்சவின் புதிய கண்டுபிடிப்பு! தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகள் தீவரவாதத்தை பரப்புகின்றன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top