• Latest News

    August 31, 2014

    மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் :ஜனாதிபதி

    மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிபிலை – மடுல்லயில் இடம்பெற்ற பொது வர்த்தக நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

    மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் சாதகமான முடிவு ஒன்று வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை, போரை நிறைவு செய்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஊவா மாகாண சபையை பொது மக்கள் இந்த முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கே வழங்குவார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் :ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top