(நேர்காணல்: எஸ்.தயா)
'பல் போனால் சொல் போச்சு 'என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்பதில் சிரமம் ஏற்படும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்கச் செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளிவிடும். தற்போதுள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல் விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் வைத்திய நிபுணர் மீராஸ் முக்தார்.
பற்சுகாதாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பல்லில் பாதிப்பு ஏற்படும் முன்னரே வைத்தியரை நாடி, பற்களை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக பற்கள் பாதிக்கப்பட்டு வீக்கத்துடன் வருவோருக்கு நாம் உடனடியாக சிகிச்சை வழங்குவது குறைவு. ஓரளவு சிறிதாக வீக்கம் இருப்பவர்களுக்கு பல் நீக்கப்படும். ஆனால், பெரியளவில் வீக்கம் உடையவர்களுக்கு பற்கள் நீக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு ஏற்ற மாத்திரைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட நாளில் தான் பற்களை கழற்றுவோம்.
சிறு வயதிலிருந்தே பற்களை ஆரோக்கியமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல் வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் இருதடவை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் படியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாயைக் கொப்பளித்து உடனடியாகப் பல்லை சுத்தம் செய்ய வேண்டும். 'பல் போனால் சொல் போச்சு 'என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்பதில் சிரமம் ஏற்படும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்கச் செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளிவிடும். தற்போதுள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல் விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் வைத்திய நிபுணர் மீராஸ் முக்தார்.
பற்சுகாதாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பல்லில் பாதிப்பு ஏற்படும் முன்னரே வைத்தியரை நாடி, பற்களை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக பற்கள் பாதிக்கப்பட்டு வீக்கத்துடன் வருவோருக்கு நாம் உடனடியாக சிகிச்சை வழங்குவது குறைவு. ஓரளவு சிறிதாக வீக்கம் இருப்பவர்களுக்கு பல் நீக்கப்படும். ஆனால், பெரியளவில் வீக்கம் உடையவர்களுக்கு பற்கள் நீக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு ஏற்ற மாத்திரைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட நாளில் தான் பற்களை கழற்றுவோம்.
சிறு வயதிலிருந்தே பற்களை ஆரோக்கியமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல் வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எச்சிலில் உள்ள அசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகின்றன. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரைத் தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது பல் சொத்தை வாயில் வலியை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடனே கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் பல ஆண்டுகளுக்கு பல்லைக் காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம்.
பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்கியத்தையும், முகத்தின் அழகையும் பாதுகாக்க முடியும்.
பற்களின் அமைப்பு ஒழுங்கற்றதாகக் காணப்படுபவர்களுக்கு பற்களுக்கு கிளிப் பாவிப்பதால் அவர்களின் பற்களை சரி செய்து கொள்ளமுடியும். பற்கள் முன்பக்கம் நீண்டு இருப்பவர்களுக்கு பற்கள் உள்ளே செல்ல பல்லுக்கு கிளிப் பொருத்தும் போது பற்களில் இட வசதி இல்லாமல் இருந்தால் முன்பக்கத்தில் கடவாய்ப் பற்கள் இரண்டை நீக்கி விட்டு பொறுத்துவதால் பற்கள் சரிவர வாய்ப்புள்ளது. இந்த கிளிப்களில் நிரந்தரமானது, தற்காலிகமானது என இருவகை உள்ளது.
அதாவது, உணவு உண்ணும் போது நீக்கி பின் பொருத்துதல், மற்றது நிரந்தரமான பல் கிளிப். ஒரு குறிப்பிட காலம் வரை நீக்காமல் பற்கள் உள்ளே சென்ற பிறகு நீக்கக் கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வயது எல்லை முக்கியமானது. உதாரணமாக 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலகுவில் பற்கள் சீராக அமையும். அதேவேளை, 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொருத்தினால் காலதாமதமாகவே பற்கள் சீராக அமையும்.
சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பக்டீரியாக்கள் பெருகுவதற்கு காரணமாகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடிந்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில் அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் தங்காது. பக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். துர்நாற்றமும் ஏற்படாது.
ஈறுகளில் வீக்கமும் இரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும். பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளியாக பல்லின் மேற்பரப்பில் தோன்றும். இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையையும் சிகிச்சையையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம். ஆனால் மிக ஆழமாகக் குழி உண்டாகி நரம்பு வரையிலும் பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் பற்களைப் பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் உருவாகும். ஆனால் அதற்கு முன்பே பல் மருத்துவரை நாடினால் வேர் சிகிச்சை மூலம் பல்லைப் பிடுங்காமலே காப்பாற்ற முடியும்.
பற்களை கழற்றினால் ஒரு மாதத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லை எனில் மேற்பற்கள் கீழே இறங்கவோ அல்லது கீழ்ப் பற்கள் மேலே ஏறவோ அல்லது பக்கவாட்டுப் பற்கள் சரியவோ கூடும். இதைத் தவிர்த்து எஞ்சிய பற்களைப் பாதுகாக்கப் பொய்ப் பற்கள் கட்டிக்கொள்வதுதான் உத்தமம். பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.
காபனீரொசைட் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன.
பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரோ மூலம் அருந்தலாம். பால்புட்டியில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே உறங்கிவிடுவார்கள்.
இந்தச் சமயத்தில், பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே, குழந்தை பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரைக் குடிக்கச் செய்வது அவசியம். பற்களின் பாதுகாப்புக்கும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்பிருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. புகையிலை மற்றும் மதுப் பழக்கம் ஈறுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.
மனிதரின் பற்கள் முகத்தின் கீழ்ப்பக்கம் இருக்கும் மேல்தாடை எலும்பான அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு. குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.
பாற்பற்கள்
மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேல் தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும்.
குழந்தைகளைப் பொறுத்தமட்டில் இவர்களுக்கு பால் தான் மிக முக்கியமான உணவாக இருக்கிறது. காபோவைதரேட் அதிகளவு பாலில் இருக்கிறது. பாலில் அதிக சத்து இருப்பது போலவே பல்லுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
பெற்றோர்கள் தான் குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதிலும், சுத்தமாக வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவுகள் பற்களில் தேங்கி நிற்பதால் பற்சொத்தை, பூச்சிப் பல் வர இது ஒரு காரணமாக அமைகிறது. மேலும் குழந்தைகளை பராமரிப்பதில் தாய்மார்கள் தான் அதிகம் அங்கம் வகிக்கின்றனர். எனவே சிறுவர்களுக்கு கொடுக்கும் பால் சூடாக இருக்கும் போது அவற்றை வாயால் ஊதுவதால் தாய்மார்களுக்கு பூச்சிப்பல் இருந்தால் குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளது.
பெற்றோர்கள் தான் குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதிலும், சுத்தமாக வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவுகள் பற்களில் தேங்கி நிற்பதால் பற்சொத்தை, பூச்சிப் பல் வர இது ஒரு காரணமாக அமைகிறது. மேலும் குழந்தைகளை பராமரிப்பதில் தாய்மார்கள் தான் அதிகம் அங்கம் வகிக்கின்றனர். எனவே சிறுவர்களுக்கு கொடுக்கும் பால் சூடாக இருக்கும் போது அவற்றை வாயால் ஊதுவதால் தாய்மார்களுக்கு பூச்சிப்பல் இருந்தால் குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளது.
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பற்தூரிகையை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பற்தூரிகையை தெரிவு செய்வது அவசியம். பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வாய்த் துர்நாற்றம்
ஒழுங்கான முறையில் பற்தூரிகையை பயன்படுத்தாமை. உதாரணமாக நாம் அனைவரும் முன்பற்களுக்கு மாத்திரம் பற்தூரிகையை பயன்படுத்துகிறோம். ஆனால், அவ்வாறு செய்வது உகந்ததல்ல. உட்புற, வெளிப்புற பற்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவற்றை நன்றாக பற்தூரிகைகளைக் கொண்டு துலக்க வேண்டும்.
பற்களில் உணவு தேங்கியிருப்பதாலும், பல்லுக்கும் ஈறுக்குமிடையே சிறு இடைவெளி ஆரம்பித்து அதன் பிறகு பெரியவில் ஈறுகளை பாதிக்கச் செய்கின்றது. நாக்கில் பற்கள் படுவதாலும் வாய்த் துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமைகின்றது.
நிறமாற்றம்
விழுதல், அடிபடுதல் போன்ற பாதிப்புக்களால் பல்லின் நரம்புகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக பல்லில் நிறமாற்றம் ஏற்படாது. 3– 4 மாதங்களில் பற்களில் நிறமாற்றம் ஏற்படும். இந்த நிறமாற்றமானது உடனடியாக ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு பல் செத்துப் போய்விடும்.
உணவு உண்பதாலும் நிறம் மாற வாய்ப்புள்ளது. கோப்பி, தேநீர் சொக்லேட் ஆகியவை சாதாரணமாக நிறமாற்றத்துக்கு ஏதுவாக அமைகின்றன. மருந்துகளை எடுப்பதாலும் பற்கள் நிறமாற வாய்ப்புள்ளது. மற்றது முதுமை ஒரு காரணமாக அமைகிறது.
ஒழுங்கான முறையில் பற்தூரிகையை பயன்படுத்தாமை. உதாரணமாக நாம் அனைவரும் முன்பற்களுக்கு மாத்திரம் பற்தூரிகையை பயன்படுத்துகிறோம். ஆனால், அவ்வாறு செய்வது உகந்ததல்ல. உட்புற, வெளிப்புற பற்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவற்றை நன்றாக பற்தூரிகைகளைக் கொண்டு துலக்க வேண்டும்.
பற்களில் உணவு தேங்கியிருப்பதாலும், பல்லுக்கும் ஈறுக்குமிடையே சிறு இடைவெளி ஆரம்பித்து அதன் பிறகு பெரியவில் ஈறுகளை பாதிக்கச் செய்கின்றது. நாக்கில் பற்கள் படுவதாலும் வாய்த் துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமைகின்றது.
நிறமாற்றம்
விழுதல், அடிபடுதல் போன்ற பாதிப்புக்களால் பல்லின் நரம்புகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக பல்லில் நிறமாற்றம் ஏற்படாது. 3– 4 மாதங்களில் பற்களில் நிறமாற்றம் ஏற்படும். இந்த நிறமாற்றமானது உடனடியாக ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு பல் செத்துப் போய்விடும்.
உணவு உண்பதாலும் நிறம் மாற வாய்ப்புள்ளது. கோப்பி, தேநீர் சொக்லேட் ஆகியவை சாதாரணமாக நிறமாற்றத்துக்கு ஏதுவாக அமைகின்றன. மருந்துகளை எடுப்பதாலும் பற்கள் நிறமாற வாய்ப்புள்ளது. மற்றது முதுமை ஒரு காரணமாக அமைகிறது.
பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங்களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. சிறு வயது முதல் கல்சியம், அயடின் மற்றும் பொஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் உண்ண வேண்டும். விற்றமின் சத்து அதிகம் உள்ள தோடம்பழம், எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். மீன், கீரை வகைகள், தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவேண்டும்.
சூடாகவும், காரமாக, அதிக குளிராகவும் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக துலக்கவும். விபத்து போன்ற காரணங்களினால் பற்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சூடாகவும், காரமாக, அதிக குளிராகவும் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக துலக்கவும். விபத்து போன்ற காரணங்களினால் பற்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எவ்வளவு விரைவில் வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற முடியுமோ அந்தளவுக்கு பற்களை காக்கமுடியும். உதாரணமாக ஒரு விபத்தில் பல் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டால் அந்தப் பல் இறப்பதற்கு முன் பொருத்த வேண்டும். ஒரு சில மணித்தியாலங்களின் பின் அந்தப் பல்லைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.
ஞானப் பல்
18–20 வயதினருக்குத்தான் ஞானப் பல் முளைக்கின்றது. ஆனால் பல் முளைப்பதற்கான இடவசதி இல்லாததால் காய்ச்சல், வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல், முரசுகளின் டிசுக்களில் அதிக உணவுகள் தேங்கி நிற்பதால் பூச்சிப் பல் சொத்தை பல் வரக் காரணமாக அமைகிறது. ஒரு சிலருக்கு ஞானப்பல் முளைக்க ஆரம்பித்த உடன் அது வளர்வதற்கு இடமில்லை என்றால் வைத்தியர்கள் அறிந்த பின்னர் அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள்.
பற்தூரிகை
பற்களுக்கு தொடர்ந்தும் ஒரே பல் தூரிகையை பயன்படுத்துவதால் தூரிகை தேய்ந்து விடுகின்றது. இதனால் அதைப் பாவிப்பதால் எந்தவிதமான பயனையும் பெறமுடியாது. இதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்தூரிகைகளை மாற்றவேண்டும். பற்தூரிகைகள் பலவிதமான ரகங்களில் காணப்படுகின்றன. ஒவ்வொருவரின் பற்களின் தன்மைக்கு ஏற்றவாறு பற்தூரிகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சொப்ட், மீடியம், ஆட் என பற்தூரிகைகள் காணப்படுகின்றன.
வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு பற்தூரிகைகளை தேர்ந்தெடுக்கலாம். அதாவது அதிகம் தேய்ந்த பற்களுக்கு மென்மையான பற்தூரிகைகளை பயன்படுத்தவேண்டும். பொதுவானவர்களுக்கு மீடியம் பற்தூரிகையே சாலச் சிறந்தது.
வாய்புற்று நோய்
ஒரு சிலர் வெற்றிலை அதிகம் உண்பதாலும், புகைப்பதனாலும் புற்று நோய் வரவாய்ப்புள்ளது. பற்கள் சுத்தமில்லாமல் வாய்ப்புற்று நோய் வர மூலக் காரணமாக அமையாது.
18–20 வயதினருக்குத்தான் ஞானப் பல் முளைக்கின்றது. ஆனால் பல் முளைப்பதற்கான இடவசதி இல்லாததால் காய்ச்சல், வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல், முரசுகளின் டிசுக்களில் அதிக உணவுகள் தேங்கி நிற்பதால் பூச்சிப் பல் சொத்தை பல் வரக் காரணமாக அமைகிறது. ஒரு சிலருக்கு ஞானப்பல் முளைக்க ஆரம்பித்த உடன் அது வளர்வதற்கு இடமில்லை என்றால் வைத்தியர்கள் அறிந்த பின்னர் அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள்.
பற்தூரிகை
பற்களுக்கு தொடர்ந்தும் ஒரே பல் தூரிகையை பயன்படுத்துவதால் தூரிகை தேய்ந்து விடுகின்றது. இதனால் அதைப் பாவிப்பதால் எந்தவிதமான பயனையும் பெறமுடியாது. இதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்தூரிகைகளை மாற்றவேண்டும். பற்தூரிகைகள் பலவிதமான ரகங்களில் காணப்படுகின்றன. ஒவ்வொருவரின் பற்களின் தன்மைக்கு ஏற்றவாறு பற்தூரிகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சொப்ட், மீடியம், ஆட் என பற்தூரிகைகள் காணப்படுகின்றன.
வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு பற்தூரிகைகளை தேர்ந்தெடுக்கலாம். அதாவது அதிகம் தேய்ந்த பற்களுக்கு மென்மையான பற்தூரிகைகளை பயன்படுத்தவேண்டும். பொதுவானவர்களுக்கு மீடியம் பற்தூரிகையே சாலச் சிறந்தது.
வாய்புற்று நோய்
ஒரு சிலர் வெற்றிலை அதிகம் உண்பதாலும், புகைப்பதனாலும் புற்று நோய் வரவாய்ப்புள்ளது. பற்கள் சுத்தமில்லாமல் வாய்ப்புற்று நோய் வர மூலக் காரணமாக அமையாது.
சிறந்த முறையில் பல் துலக்குவதை கடைபிடிக்க வேண்டும். பற்களில் ஏதாவது துளைகள் ஏற்பட்டால் அவற்றிற்கு சிகிச்சை பெற்றும்,மேலும் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வைத்தியரிடம் சென்றும் சிகிச்சை பெறவேண்டும். இவ்வாறு செய்தால் பற்களை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியும்.
சிறு துண்டு பல் மிக நீண்ட காலமாக முரசில் தங்கியிருப்பதால் பல் வீக்கம், தலைவலி போன்றன ஏற்பட வாய்ப்புள்ளது.
தெற்றுப் பல்
தெற்றுப் பல் பரம்பரை என்று சொல்லலாம். எலும்பின் அமைப் பும் ஒரு காரணமாக அமைகின்றது. இதற்கு வைத்திய சிகிச்சை பெறுவதன் மூலம் சரிசெய்து விட லாம். விபத்தின் காரணமாகவும் தெற்றுப் பல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பூச்சிப் பல் வராமல் தடுக்க
இன்று நடைமுறையில் அதிக உணவுகள் இனிப்புவகைகளை சார்ந்தவையாகும். அவற்றை உண்பதால் எமது பற்களின் இடுக்குகளில் ஒரு மணிநேரம் உணவுகள் தங்கியிருப்பதால் தான் பூச்சிப் பல் வர காரணமாக அமைகிறது. மேலும் பற்களை காலையில் மாத்திரம் துலக்கிவிட்டு இரவு நேரத்தில் துலக்காததாலும் பூச்சிப்பல் வரலாம்.
எனவே நாம் உணவு உண்ட உடனே பற்களை துலக்கவேண்டும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தொழிலுக்கு செல்வதால் இதனைக் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் ஒரு நாளைக்கு கண்டிப்பாக இரு முறை பல் துலக்கவேண்டும். காலையிலும்இ இரவு படுக்கைக்குப் போக முன்பும் பல் துலக்கவேண்டும்.
வைத்தியரின் தொடர்புகளுக்கு: 0114952352
நன்றி: மெட்ரோ நியூஸ்
தெற்றுப் பல்
தெற்றுப் பல் பரம்பரை என்று சொல்லலாம். எலும்பின் அமைப் பும் ஒரு காரணமாக அமைகின்றது. இதற்கு வைத்திய சிகிச்சை பெறுவதன் மூலம் சரிசெய்து விட லாம். விபத்தின் காரணமாகவும் தெற்றுப் பல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பூச்சிப் பல் வராமல் தடுக்க
இன்று நடைமுறையில் அதிக உணவுகள் இனிப்புவகைகளை சார்ந்தவையாகும். அவற்றை உண்பதால் எமது பற்களின் இடுக்குகளில் ஒரு மணிநேரம் உணவுகள் தங்கியிருப்பதால் தான் பூச்சிப் பல் வர காரணமாக அமைகிறது. மேலும் பற்களை காலையில் மாத்திரம் துலக்கிவிட்டு இரவு நேரத்தில் துலக்காததாலும் பூச்சிப்பல் வரலாம்.
எனவே நாம் உணவு உண்ட உடனே பற்களை துலக்கவேண்டும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தொழிலுக்கு செல்வதால் இதனைக் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் ஒரு நாளைக்கு கண்டிப்பாக இரு முறை பல் துலக்கவேண்டும். காலையிலும்இ இரவு படுக்கைக்குப் போக முன்பும் பல் துலக்கவேண்டும்.
வைத்தியரின் தொடர்புகளுக்கு: 0114952352
நன்றி: மெட்ரோ நியூஸ்
0 comments:
Post a Comment