• Latest News

    September 28, 2014

    'சிறகடிக்கும் வண்ணாத்திப் பூச்சி' சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கு

    பி.எம்.எம்.எ.காதர்;
    கல்முனை பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மாணவர்களுக்கு 'சிறகடிக்கும் வண்ணாத்திப் பூச்சி' என்ற தலைப்பில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான விழிப் பூட்டல் கருத்தரங்கு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி ஷரிபா சாஜஹான் தலைமiயில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் கல்முனை  பிரதேச செயலாளர் எம்.மங்கள
    விக்ரம ஆராச்சி பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நலன் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால் விஷேட அதிதியாகவும், வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம். இனாமுல்லா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். கல்முனை பிரதேச செயலக தலைமைக் கிராம அதிகாரி; ஏ.எச்ஏ.லாஹீர் மொழிபெயர்ப்பாளராகக் கலந்து கொண்டார்.  இவர்களுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'சிறகடிக்கும் வண்ணாத்திப் பூச்சி' சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top