• Latest News

    September 06, 2014

    ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

    இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
     
    இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்i நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
     
    அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரி மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
     
    2002ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது அன்றில் இருந்து யசூசி அகாசி ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
     
    இது இவரது இலங்கைக்கான 24 ஆவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top