• Latest News

    September 21, 2014

    தேசப் பற்றாளர்களின் வெற்றி: ஊவா தேர்தலை வர்ணிக்கும் பிரதமர்

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபைத் தேர்தலில் பெற்ற வெற்றியானது கட்சி பெற்ற வெற்றி மாத்திரமல்ல, அது தேசப்பற்றுள்ள முழு இலங்கையர்களும் பெற்ற வெற்றியென பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

    மாகாண சபைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

    போர் முடிவுக்கு வந்த பின்னர் பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்திய அரசாங்கம், இலங்கையை ஆசியாவில் முன்னேறிய நாடாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
    இம்முறை தேர்தலில் பெற்ற வெற்றியுடன் ஊவா மாகாணத்தின் அபிவிருத்தியை மேலும் அதிகரிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது எனவும் பிரதமர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசப் பற்றாளர்களின் வெற்றி: ஊவா தேர்தலை வர்ணிக்கும் பிரதமர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top