அமைச்சர் ரிசாத் பதியூதீனின்
அமைச்சரவைக்குள் பலாத்காரமாக நுழைந்ததாக கூறப்படும் அமைப்பான பொதுபல
சேனாவின் பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லையென பொலிஸார் மீண்டும்
இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 23ம்
திகதி ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரரைத் தேடி கைத்தொழில்
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அலுவலகத்தினுள் கடும்போக்கு பொதுபல சேனா
அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டின்
அடிப்படையில் பொதுபல சேனாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (11) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment