• Latest News

    September 12, 2014

    கடத்தப்பட்ட சிறுமி தொடர்பில் தகவல் தருபவருக்கு 10 இலட்சம்

    கடத்தப்பட்ட குருநாகல், அம்ப கொலவெவ பகுதி சிறுமி குறித்து தகவல் தருபவருக்கு 10 இலட்சம் ரூபா அன்பளிப்பு வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறுமி குறித்த தகவல் இடைப்பவர்கள் 011-422 176, 011 3024 245  அல்லது 0777223095 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கோரியுள்ளார். 

    தமது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதான தமாரா ஹோசாலி எனும் சிறுமி கடந்த 9ம் திகதி அதிகாலை கடத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. அடங்கலாக 6 விசாரணை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு இவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற மாந்திரிகர் (கபுரால) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னேற்றகரமான எதுவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.-TK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடத்தப்பட்ட சிறுமி தொடர்பில் தகவல் தருபவருக்கு 10 இலட்சம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top