• Latest News

    September 29, 2014

    தரம் ஐந்து பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவிக்கு வரவேற்பு

    சஹாப்தீன்:
    2014ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசு பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றி கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மி 193 புள்ளிகளை பெற்று அம்பாரை மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.

    இன்று, இம்மாணவிக்கு பாடசாலையில் அமோக வரவேற்று இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் பியசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் மற்றும் ஆசிரியர்கள்  மாணவி செல்வி. அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகளையும் வழங்கினார்கள்.

    இதே வேளை, இப்பாடசாலையில் 178 புள்ளிகளைப் பெற்ற செல்வி.முஹம்மட் ராபியு பாத்திமா சியாசத் மிப்ரா எனும் மாணவியும் நேற்று கௌரவிக்கப்பட்டார்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தரம் ஐந்து பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவிக்கு வரவேற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top