நடைபெற்று
முடிந்துள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் முன்னிலை பெற்றுள்ள
போதிலும் எதிர்க்கட்சிகளுக்கே சாதகமான தேர்தலாக அமைந்துள்ளது.
இந்த தேர்தல் அரசாங்கத்தை பலவீனப் படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கும் அரசாங்க பங்காளிக் கட்சியான ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீதான வெறுப்பினை முஸ்லிம்
மக்கள் நேரடியாக வெளிப்படுத்தி விட்டனர். அரசாங்கத்தில் இருந்து
கொண்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற முடியாது என்பதை உணர்ந்து
விட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்துள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள்
இணைந்து போட்டியிட்டிருந்த போதிலும் ஒரு ஆசனத்தையேனும்
பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. இந்நிலை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் வினவிய போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.சி. ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஊவா மாகாண சபைத்தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவில் தேர்தல்
பெறுபேறுகள் சாதகமானதாக அமையவில்லை. அரசாங்கத்திற்கும் இம்முறை
தேர்தல் சற்று பின்னடைவினையே ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே
ஊவா மாகாண முஸ்லிம் மக்களின் நம்பிக்கையில் நாம் அகில இலங்கை மக்கள்
காங்கிரசுடன் இணைந்து நு.ஆ. கட்சியில் போட்டியிட்டிருந்த போதிலும்
முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை. அத்தோடு முஸ்லிம்
மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியினையே
பலப்படுத்தியுள்ளது. மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு
நாம் எமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றாலும் மக்கள் எம்மை
ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. அத்தோடு அரசாங்கத்தின் மீதான
வெறுப்பினை முஸ்லிம் மக்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊவா தேர்தலில் களமிறங்கும்
எண்ணம் இருக்கவில்லை. எனினும் மக்களின் வேண்டுகோளுக்கும் ஒரு சிலரின்
கோரிக்கைகளுக்கும் அமையவுமே நாம் இரட்டை இலை சின்னத்தில்
போட்டியிட்டோம். இது எமது பரீட்சார்த்த நடவடிக்கையாகவே
அமைந்திருந்தது. எனினும் இதில் மக்கள் எங்களை நிராகரித்துள்ளனர்.
மேலும் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு நல்லதொரு
சந்தர்ப்பமாகவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும்
கட்சியாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனினும்
எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இன்மையும் முரண்பாடுகளுமே
அரசாங்கத்தை பலப்படுத்தி வருகின்றன. அத்தோடு அரசாங்கம் கடந்த
காலங்களில் சிறுபான்மை மக்கள் விடயத்தில் தவறிழைத்துள்ளமை இத்
தேர்தலில் அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தின் எதிர்ப்பினை சம்பாதிக்க
காரணமாக அமைந்துள்ளது.
எனினும் அரசாங்கத்தின் வெற்றி இன்னமும் முன்னோக்கியுள்ளமையானது
அரசாங்கத்தை பலப்படுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் அரசியல்
மாற்றங்கள் சமூகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் செய்யுமாயின்
மூவின சமூகத்தின் ஆதரவுடனும் பலமானதொரு ஆட்சியை அமைக்க முடியும் எனவும்
அவர் தெரிவித்தார்.-வீரகேசரி
0 comments:
Post a Comment