• Latest News

    September 22, 2014

    தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி

    இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி, அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேலும் வேகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வழங்கப்பட்ட மக்கள் வாக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    அரசுக்கு எதிராக கொண்டு செல்லப்பட்ட தீங்கிழைக்கும் மற்றும் வெறுக்கத்தக்க சோதனைகளை ஊவா மக்கள் மோசமாக மறுத்துள்ளதாக இந்த வெற்றி உறுதி செய்கிறது. நாம் மற்றையவற்றை விட மக்களின் விருப்பங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    அதேபோல் நாட்டு மக்களின் தேவைகள், தேசிய தேவைகளை தோல்வியடையச் செய்ய யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், எனக் கூறப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top