• Latest News

    October 28, 2014

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க பாலியல் கப்பம்: விசாரணை ஆரம்பம்

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் கப்பம் பெறப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ள.

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முகாமையும் தெரிவாளர்களும் வீராங்கனைகள் தேசிய அணிக்கு தெரிவாகவும், தமது இடங்களை தக்க வைத்துக் கொள்ளவும் பாலியல் கப்பம் பெற்றுக் கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியின.

    இலங்கையின் உள்ளூர் பத்திரிகை ஒன்று இந்த தகவலை வெளியிட்டது. இதனையடுத்தே குறித்த குற்றச்சாட்டை விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    இந்தக்குழு தமது விசாரணையை நாளை மறுநாள் வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.

    இதன்போது தேசிய தெரிவாளர்கள், முகாமையாளர், பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியின் அங்கத்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க பாலியல் கப்பம்: விசாரணை ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top