• Latest News

    June 28, 2015

    ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு! மஹிந்த அணியில் இணையும் சுசில் பிரேமஜயந்த?

    ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
     
    ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த, நாளையதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில் இணைந்துக்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே சுசில் பிரேம்ஜயந்த வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டார். அவர் நாளை நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதன்பின்னர் உடனடியாகவே அவர் மஹிந்த ராஜபக்சவுக்கான பிரசாரங்களில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நிலையை வழங்குவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பின்னடிப்பதே தற்போதைய நிலைமைக்கான காரணமாக அமைந்துள்ளது.

    இதேவேளை மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள 6 பேர் குழு நாளை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு! மஹிந்த அணியில் இணையும் சுசில் பிரேமஜயந்த? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top