• Latest News

    September 07, 2016

    உலக சுகாதார அமைப்பின் 69வது தென் கிழக்குக்கான மாநாடு கொழும்பு தாமரைத் தடாத்தில் ஆரம்பமானது

    சப்னி அஹமட்-
    உலக சுகாதார அமைப்பின் 69வது  தென் கிழக்குக்கான மாநாடு சற்றுமுன் கொழும்பு தாமரைத் தடாத்தில் ஆரம்பமானது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் இடம்பெறும் இம்மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

    11 நாடுகள் பங்குபற்றும் இம்மாட்டின் போது சுகாதாரத்துறை புரட்சி பற்றி பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரினால் விசேட உரைகளும் இடம்பெற்றது. இங்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், மாகாண சுகாதர அமைச்சர்கள் , என பலரும் கலந்துகொண்டனர். அமைச்சர்களான சுசில் பிரமஜேந்த, ரவுப் ஹக்கீம், நவீன் திஸ்ஸநாயக்க பிரதியமைச்சர் பைசால் காசீம் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்,  கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர், உட்பட பலரும் கலந்துகொண்டனர் 

    இம்மாநாடு இன்று (5) தொடர்க்கம் 09ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது . 








     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலக சுகாதார அமைப்பின் 69வது தென் கிழக்குக்கான மாநாடு கொழும்பு தாமரைத் தடாத்தில் ஆரம்பமானது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top