• Latest News

    November 21, 2017

    தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

    மேல்மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
    மேல்மாகாணம் உள்ளிட்ட ஏனைய சகல மாவட்டங்களில் நிரந்தரமாக வசிக்கும் பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்படங்கள் கோரப்பட்டுள்ளன.

    மேல்மாகாணத்திற்கு காணப்படும் வெற்றிடங்களுக்கு மேல்மாகாணத்திற்குள் நிரந்தரமாக வசிக்கும் விண்ணப்பதாரிகள் எழுத்துமூல போட்டிப்பரீட்சைக்கு சித்தியடையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் புள்ளிகளின் அடிப்படையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோர் நியமிக்கப்படுவர்.

    இவர்கள் தகவல்தொழில்நுட்பம் மற்றும் அழகியற்கலை பாடங்களுக்கு மாத்திரதே தெரிவுசெய்யப்படுவர். இது தொடர்பான விபரம் இன்று வெளியான லேக்கவுஸ்நிறுவன பத்திரிக்கையான தினகரன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top