கொழும்பு மாவட்டத்தின் ராஜகிரிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(9.12.2017) அன்று நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான பாதைகள் மற்றும் சிறு வீதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment