• Latest News

    December 06, 2017

    வாழ்க்கைச் செலவை கட்டுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை

    சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
    இதனால் நாட்டின் உணவு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. உணவு பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இது காரணமாக அமைந்தள்ளது.

    விசேடமாக அரிசி , தேங்காய் மற்றும் மரக்கறி வகைளின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

    குறித்த நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியவசிய உணவு உற்பத்திப் பொருட்களை போதுமான அளவு சந்தைக்கு வழங்குவதற்காக பின்வரும் நடவடிக்கைகளை துரிதகதியில் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

    • திறைசேரியின் மேற்பார்வையின் கீழ் அரிசி இறக்குமதி செய்வதற்காக ஏதேனுமொரு தனியார் நிறுவனத்துக்கோ அல்லது இலங்கை கூட்டுறவு சங்கத்துக்கோ வசதிகளை செய்து கொடுத்தல்.

    • தேவையான தேங்காய்களை பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இறக்குமதி செய்தல்.

    • பயிர்செய்கை குறைவடைந்துள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளுக்கு மேலதிகமாக வழங்க முடியுமான சலுகைகள் தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு என அதிகாரிகள் குழுவொன்றினை நியமித்தல்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாழ்க்கைச் செலவை கட்டுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top