• Latest News

    September 11, 2019

    சேவலுக்கு எதிராக வழக்கு!

    சேவ­லொன்று கூவு­வதால் அய­ல­வர்­களின் நித்­திரை குழம்­பு­வ­தாக தெரி­வித்து நீதி­மன்றில் தொடுக்­கப்­பட்ட வழக்கில் சேவ­லுக்கு ஆத­ர­வாக பிரான்ஸ் நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.
    மோரிஸ் எனும் இச்­சே­வலை கொரின் பெசியு என்­பவர் வளர்த்து வரு­கிறார். இந்த சேவல் அதி­கா­லையில் உரத்து கூவு­வதால் அயலில் உள்­ள­வர்­களின் உறக்கம் குழம்­பு­வ­தாக வழக்குத் தொடுக்­கப்­பட்­டது.உல்­லாச விடு­தி­யொன்றின் நிர்­வா­கத்தால் இந்த வழக்குத் தொடுக்­கப்­பட்­டது.
    அதி­காலை 4 மணிக்கு தாம் விழித்­தெழ வேண்­டி­யி­ருப்­ப­தாக ஓய்வு பெற்ற விவ­சா­யி­யான ஜீன் லூயிஸ் பைரோனும், அவரின் மனைவி ஜோலியும் தெரி­வித்­தனர். இவ்­வ­ழக்கு விசா­ரணை ஆரம்­ப­மா­கி­ய­போது, பிரான்ஸின் கிரா­மிய பாரம்­ப­ரி­யங்­களைப் பேண விரும்பும் மக்கள் மேற்­படி சேவ­லுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­தனர்.
     இச் சேவலைக் காப்­பாற்­று­மாறு கோரும் மனுவில் 140,000 பேர் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில், இவ்­வ­ழக்கை விசா­ரித்த நீதி­மன்றம், குறித்த சேவல் அங்கு தொடர்ந்தும் இருக்­கலாம் என கடந்த வாரம் தீர்ப்­ப­ளித்­தது.
    அத்­துடன் வழக்குத் தொடுத்­த­வர்­களால் சேவலின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு 1000 யூரோ (சுமார் 2 இலட்சம் இலங்கை ரூபா) செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    மெட்ரோநியூஸ் -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சேவலுக்கு எதிராக வழக்கு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top