(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் ஐந்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு
அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த அம்பாறை பிரதேச செயலாளராகவும்,
அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எஸ். என்.சொய்ஸா சிறிவர்தன -அம்பாறை மாவட்ட
மேலதிக அரசாங்க அதிபராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராகவும், நிந்தவூர்
பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம். அன்ஷார் (நளீமி) அக்கரைப்பற்று
பிரதேச செயலாளராகவும்,
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் இறக்காமம் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த இடமாற்றங்கள் யாவும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment