(எம். என். எம். அப்ராஸ்)
கிழக்கு மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன கிழக்கு மாகாணத்தில் உள்ள 4 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுகளில் கொரோனா வைரசின் டெல்டா பிறழ்வு வைரஸின் தாக்கம் பரவலாக அதிகரித்துள்ளது ஆய்வு கூட அறிக்கை மூலம் எமக்கு கிடைககப்பெற்றுள்ளது இதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் நான்காம் வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது .இது செப்டம்பர் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை சிறிது குறைவு காணப் பட்டாளும் இது மேலும் குறைவடைவது பொது மக்களின் அன்றாட வாழ்வியல் , இரண்டு தடுப்பூசியும் பெறுவதிலும் ஏனைய தொற்றா நோய்களான சுவாச ,இருதய,நீரிழிவு போன்ற ஏணைய தொற்றா நோய்களை இவற்றை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும் ஏனென்றால் இன் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசியை பெறாதவர்கள் ,60 வயதிற்கு மேற்பட்டவர்களும், அதிகமாக மரணம் சம்பவித்துள்ளது .
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்தெரிவித்தார். (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்கி கொண்டிருக்கிறது 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் இதனால் இதுவரை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுகொள்ள முடியும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி இதுவரை கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட முதலாவது டோஸ் 90 வீதமானோரும் , இரண்டாவது டோஸ் 75 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 20 வயதுக்கும் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி விரைவில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது மேலும் மிகவும் இறுக்கமாக பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
யுனிசெப் நிறுவனத்தினால் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதில் முகக்கவசம், முகத்திரை, பி.பி.ஈ. பாதுகாப்பு அங்கிகள், தொற்றுநீக்கி(சனிடைசர்), உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கொண்ட பொதிகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன.இதற்கு யுனிசேப் நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சு சார்பாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment