• Latest News

    May 30, 2023

    மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டம்?


    மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பல இடங்களில் இருந்தும் இவ்வாறான குழுக்கள் உருவாகி வருவதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் இவை தற்செயலான செயற்பாடுகள் இல்ல எனவும், ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் விசேட பொலிஸ் பிரிவை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top