உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க தனது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் USAID இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதி முறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை, எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதி முறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்று நாமல் ராஜபக்ஷ அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment