• Latest News

    September 06, 2013

    அரச புலனாய்வுச் சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ்!

    தேசிய பாதுகாப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சில் இருந்த  பொலிஸ் திணைக்களத்தை நீதி மற்றும் ஒழுங்கமைப்பு தொடர்பான புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் அந்த திணைக்களத்தின் கீழ்  பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட அரச புலனாய்வுப்பிரிவு தொடர்ந்தும் தேசிய பாதுகாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஊதியம் வழங்குதல் போன்றவை தொடர்ந்தும் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் உத்தியோகத்தரகளுக்கான பதவி உயாவுகளும் அவ்வாறே இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.

    என்றாலும் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் குறறப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (TID) மற்றும் விசேட அதிரடிப் படைப் பிரிவு (STF) ஆகியன புதிய அமைச்சான நீதி மற்றும் ஒழுங்கமைப்பு அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நீதி மற்றும் ஒழுங்கமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ருவன் சந்தனவிடம் கேட்டபோது அரச புலனாய்வுச் சேவையானது பிரிம்பான ஒரு செயற்திட்டம் என்பதன் காரணமாக அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமையும்.

    இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தனவிடம் கேட்டபோது அரச புலனாய்வுச் சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் எனவும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் பொலிஸ் திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.

    2013 ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி 1823/70ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீதி மற்றும் ஒழுங்கமைப்பு தொடர்பான புதிய அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்டதுடன்இ அந்த அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களில் ஒன்றான பொலிஸ் திணைக்களம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரச புலனாய்வுச் சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top