போர்ட் எலிஸபெத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பினைத் தெரிவுசெய்தது. இப்போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டமையினால் அணிக்கு 45 ஓவர்களாக மட்டுப்படுப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 45 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப்பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. ஹஸீம் அம்லா 98 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதமடிக்க தவறினார். அணித்தலைவர் ஏ.பி.டி வில்லியர்ஸ் 74 ஓட்டங்களையும் கியூ டி கொக் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஜுனைட் கான் 3 விக்கெட்களையும் அப்ரிடி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக அஹமட் ஷெஹ்ஷாட் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளையும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் தொடரினைக் கைப்பற்றியுள்ளது. 3ஆவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment