சுகாதார சேவைக்கு சுமார் 10400 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 6025 தாதிகளும் மேலதிக சுகாதார நடவடிக்கைகளுக்கு 1999 பேரும் தாதிப்பயிற்சி பெற்ற 2000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன
இந்நியமனத்தின் பின்னர் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதிகளின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகமாகும். இந்த எண்ணிக்கையை ஐம்பதாயிரமாக அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இப்புதிய நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment