தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 3 மேலதிக வாக்குகளால் இன்று புதன்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதியமர்வு தவிசாளர் ராசையா தலைமையில் இன்று புதன்கிழமை (18.12.13) கூடியபோது தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் இணைந்து திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.காரைதீவு பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதியமர்வு தவிசாளர் ராசையா தலைமையில் இன்று புதன்கிழமை (18.12.13) கூடியபோது தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 1 வாக்கும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச்சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 உறுப்பினர்களும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவருமாக மொத்தம் 5 உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளின் வரவு - செலவுத் திட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளின் வரவு-செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment