எம்.வை.அமீர்;
இன்று அட்டாளைச்சேனையில், அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவெளித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படும் அதேவேளை அமைதி ஊர்வலம் ஒன்றும் இன்று பிரதேச மக்களால் நடாத்தப்பட்டது.
ஊர்வலத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு விரைந்த விஷேட அதிரடிப்படியினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இத்தாக்குதலின் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அன்சில் தாக்கப்பட்டார். குறித்த தாக்குதல்களை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் மாகாணசபை முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.இன்று அட்டாளைச்சேனையில், அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவெளித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படும் அதேவேளை அமைதி ஊர்வலம் ஒன்றும் இன்று பிரதேச மக்களால் நடாத்தப்பட்டது.
ஊர்வலத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு விரைந்த விஷேட அதிரடிப்படியினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இவ்வாறான மீலேச்சத்தனமான தாக்குதல்கள் அரசுமீதான நம்பிக்கையின்மையை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment