திருகோணமலை அரசடி சந்திப் பிரதேசத்தில் இருந்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு மணித்தியாலத்தில் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியை அரசடி சந்தியில் உள்ள தனியார் பாடசாலைக்குள் இருந்த நிலையில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் காவலாளியை தாக்கி விட்டு ஆசிரியையை கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது காவலாளியின் கையடக்க தொலைபேசியும் கடத்தியவர்களால் அபகரித்து செல்லப்பட்டது.
எனினும் கைத் தொலைபேசி திருகோணமலை நகரப் பகுதியில் வைத்து வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.குறித்த ஆசிரியை அரசடி சந்தியில் உள்ள தனியார் பாடசாலைக்குள் இருந்த நிலையில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் காவலாளியை தாக்கி விட்டு ஆசிரியையை கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது காவலாளியின் கையடக்க தொலைபேசியும் கடத்தியவர்களால் அபகரித்து செல்லப்பட்டது.
இதேவேளை ஆசிரியையை கடத்திச் சென்ற வான் அடையாளம் காணப்பட்ட நிலையில், அது தொடர்பான தகவல்களும் பொலிஸாரால் உரிய இடங்களுக்கு வழங்கப்பட்டன
இதனடிப்படையில் குறித்த வான், அநுராதபுரம்- திருகோணமலை எல்லைப் புறமான பதவிய என்ற இடத்தில் வைத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு ஆசிரியை மீட்கப்பட்டார்.
கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இந்தக்கடத்தல் தனிப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இடம்பெற்றது என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment