• Latest News

    September 24, 2014

    கடைத்தொகுதி பிரதேசவாசிகளால் உடைத்து தரைமட்டம்

    கடைத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் இருந்த வேளையில் பிரதேசவாசிகளால் இரவோடு இரவாக உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று கம்பளை - மரியாவத்தை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
     
    இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;
     
    மரியாவத்தை பிரதேசத்தில் நெடுஞ்சாலை அமைச்சுக்கு சொந்தமான சுமார் 7 பேச்சர்ஸ் காணியை கம்பளை நகரசபை நிர்வாகம் பிரதேசவாசிகள் எதிர்ப்பையும் மீறி நபரொருவருக்கு 20 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளது.
     
    அங்கு கடைத்தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அக்கடைத்தொகுதி அடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடைத்தொகுதி உரிமையாளர் கம்பளை பொலிஸ் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடைத்தொகுதி பிரதேசவாசிகளால் உடைத்து தரைமட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top