• Latest News

    September 09, 2014

    நிந்தவூரில் இரு பாடசாலைகளில் பால் வழங்கத்தடை!

    எம்.சஹாப்தீன்: நிந்தவூரில் இரு பாடசாலைகளில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் வழங்கப்படுகின்ற பாலினை (பால் பக்கட்) மறு அறிவித்தல் வரை வழங்க வேண்டாமென்று நிந்தவூர் பொது சுகாதார அலுவலகம் இன்று; (09.09.2014) தடைவிதித்துள்ளது.

    இன்று நிந்தவூர் கோட்டத்தில் உள்ள அல்- மஸ்ஹர் பெண்கள் பாடசாலை, அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு சில பால் பக்கட் அளவில் பெரியதாக வீங்கி காணப்பட்டன. அவற்றினை உடைத்துப்பார்த்த போது, துர்நாற்றம் வீசியதுடன், பால் திரைந்தும் காணப்பட்டன.

    இது பற்றி பாடசாலைகளின் நிர்வாகம் நிந்தவூர் பொது சுகாதார காரியலாயத்திற்கு அறிவித்தன. இதனையடுத்து, பாடசாலைகளின் பொதுச் சுகாதாரத்திற்கு பொறுப்;பான பொது சுகாதார உத்தியோகத்தர் எஸ்.றஹீம் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு வருகை தந்து, பால் பக்கட்டுக்களை பரிசீலனை செய்தார்.

    இதனையடுத்து, குறிப்பிட்ட இரு பாடசாலைகளிலும் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் பால் பக்கட்டுக்களை வழங்க வேண்டாமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் இரு பாடசாலைகளில் பால் வழங்கத்தடை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top