• Latest News

    November 22, 2014

    முஸ்லிம் காங்கிரசும் கூட்டமைப்பும் என்ன செய்யப் போகின்றன ?

    ரொபட் அன்டனி-
    இப்­போதுவரும், அப்­போதுவரும் என எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருந்த விடயம் அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. அந்­த­வ­கையில் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­துடன் விரைவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­படும் தினமும் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான விசேட அறி­வித்தல் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கையொப்­பத்­துடன் தேர்தல் திணைக்­க­ளத்­துக்கும் அர­சாங்க அச்­சக திணைக்­க­ளத்­துக்கும் நேற்று முன்­தினம் பகல் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

    அலரி மாளி­கையில் நேற்று முன்­தினம் பகல் 1.37 மணிக்கு ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­து­வது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ பிர­க­ட­னத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கைச்­சாத்­திட்டார்.பல்­வேறு தடை­களை தாண்­டியே ஜனா­தி­பதி இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்ளார் என்று கூறலாம்.

    அதா­வது கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனா­தி­பதி இரண்­டா­வது தட­வைக்­காக பத­வி­யேற்று நேற்று முன்­தி­னத்­துடன் 4 வருட பத­வி­க் காலம் முடிந்­துள்­ளதால் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு ஜனா­தி­பதி விசேட அறி­வித்தல் மூலம் கோரி­யுள்ளார்.

    ஜனா­தி­பதி யினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்று எதிர்க்­கட்­சி­க­ளி­னாலும் முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ரி­னாலும் தர்க்­கங்கள் முன்­வைக்­கப்­பட்­டு­வந்­தன.

    இந்­நி­லையில் தன்னால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இம்­மாதம் 5 ஆம் திகதி உயர் நீதி­மன்­றத்­திடம் கோரிக்­கை­வி­டுத்­தி­ருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் 10 பேர் கொண்ட குழு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்று ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தது.

    மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ போட்­டி­யி­டு­வ­தற்கு எந்தத் தடையும் இல்லை என்று உயர்­நீ­தி­மன்­றத்தின் 10 நீதி­ய­ர­சர்­களும் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்து அறி­வித்­தி­ருந்­தனர். அந்த தீர்ப்பின் பின்­னரே ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யிட்­டுள்ளார்.

    இதே­வேளைஇ கடந்த புதன்­கி­ழமை இரவு அலரி மாளி­கையில் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தியக் குழுக்­கூட்­டத்தில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ போட்­டி­யி­டுவார் என்று ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட வேண்டும் என்ற யோச­னையை அமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்வா முன்­மொ­ழிந்­துள்ளார். அதனை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி மற்றும் சி.பி.ரத்­நா­யக்க ஆகியோர் வழி மொழிந்­தனர். உட­ன­டி­யாக அனைத்து உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­ப­திக்கு ஏக­ம­ன­தான ஆத­ரவை மத்­திய குழுக் கூட்­டத்தில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக்

    கட்­சியின் மத்­திய குழுக் கூட்­ட­மா­னது மிகவும் பர­பரப்­பான சூழ­லி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. அமைச்சர் மைத்­தி­ரி­பா­லவே இந்தக் கூட்­டத்தின் பர­­பரப்­பான நிலை­மைக்கு முக்­கி­ய­மா­னவர். இந்­நி­லையில் அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முதலில் மத்­திய குழுக் கூட்­டத்­துக்கு வர விருப்பம் இன்றி இருந்­த­தா­கவும் பின்னர் அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ருமவே அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அழைத்து வந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. பின்னர் அந்தக் கூட்­டத்­தின்­போது அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பிர­தமர் பத­வியை வழங்க முன்­வந்­த­தா­கவும் அவர் அதற்கு ஒன்றும் கூற­வில்லை என்றும் தக­வல்கள் தெரி­வித்­தன.

    ஆளும் கட்­சியை பொறுத்­த­வரை ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பல பங்­காளிக் கட்­சிகள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­ வுக்­கான ஆத­ரவை உறு­தி­ப­டுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தலை­மை­யி­லான ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, அமைச்சர் பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தலை­மை­யி­லான லங்கா சம சமாஜ கட்சி மற்றும் அமைச்சர் டியு. குண­சே­கர தலை­மை­யி­லான இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி ஆகிய இட­து­சாரி கட்­சிகள் தமது ஆத­ரவை ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­து­விட்­டன.

    ஆரம்­பத்தில் இந்தக் கட்­சிகள் மூன்றும் ஜனா­தி­பதி தேர்தல் தற்­போ­தைக்கு நடத்­தப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை என்று கூறி­வந்­தன. எனினும் தற்­போது ஜனா­தி­பதி தேர்தல் உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் இந்தக் கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­துள்­ளன.

    இதே­வேளை, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் பிர­தி­ய­மைச்சர் திகாம்­பரம் தலை­மை­யி­லான தொழி­லாளர் தேசிய சங்கம், பிர­தி­ய­மைச்சர் பிரபா கணேசன் தலை­மை­யி­லான ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் உள்­ளிட்ட கட்­சி­களும் ஜனா­தி­ப­திக்­கான ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

    இந்­நி­லையில் தற்­போது தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கட்சித் தாவல்கள் ஆரம்­ப­மா­கவும் ஆரம்­பித்­து­விட்­டன. பொது­வா­கவே தேசிய மட்டத் தேர்தல் காலம் ஒன்றில் இரண்டு பக்­கங்­க­ளிலும் கட்சித் தாவல்கள் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும். அவ்­வாறு தற்­போது முத­லா­வது கட்சித் தாவல் இடம்­பெற்­றுள்­ளது. ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வசந்த சேனா­நா­யக்க நேற்றுமுன்தினம் ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்­து­கொண்­டுள்ளார்.

    ஐக்­கிய தேசிய கட்­சி பிதாக்­க­ளான டி.எஸ். சேனா­நா­யக்க பரம்­ப­ரையில் வந்த வசந்த சேனா­நா­யக்க ஆளும் கூட்­ட­ணியில் இருந்து தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்­து­கொண்­டுள்ளார்.

    நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­ட­வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலி­யு­றுத்­தி­வந்தோம். இதனை பல முறை எடுத்­துக்­கூ­றினோம். ஆனால் செவி­ம­டுக்­க­வில்லை. எனவே தாய்­நாட்டை பாது­காப்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் நம்­பிக்­கை­யுடன் இணைந்­து­கொள்­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். .

    இந்த நிலையில் எதிரணியின் பொதுவேட்பாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

    அரசாங்க தரப்பிலிருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான ராஜீதசேனாரத்ன, துமிந்த திசாநாயக்க பிரதியமைச்சர் எம்.கே.டி.எல்.குணவர்த்தன, எம்.பிக்களான ரஜீவ விஜயசிங்க ஆகியோரும் எதிரணியின் பக்கம் வந்துள்ளனர்.

    ஆளும்தரப்பிலிருந்து இன்னும் பலர் இந்த அணியினருடன் இணைந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இதே­வேளை, ஜாதிக ஹெல உறு­மய தற்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறும் நிலைக்கு வந்­து­விட்­டது. அந்­த­வ­கையில் ஹெல உறு­ம­யவில் இருந்து இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர்.

    இது அர­சாங்­கத்தை சிந்­திக்க வைத்­தி­ருக்­கும். அதே­போன்று எதிர்க்­கட்­சியில் உள்ள சில­ரையும் அர­சாங்­கத்தின் பக்கம் இழுப்­ப­தற்கு பாரிய முயற்­சிகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    இந்­நி­லையில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் இரண்டு முக்­கிய சிறு­பான்மை கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் எவ்­வாறு அமையும் என்­பது இன்னும் வெளிச்­சத்­துக்கு வராத ஒரு விட­ய­மாக இருந்­து­வ­ரு­கின்­றது.

    ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் நிலைப்­பாடு இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் காங்­கிரஸ் ஏன் இத்­தனை காலம் மௌன­மாக இருக்­கின்­றது என்று தெரி­ய­வில்லை. அதற்­காக உறு­தி­யான கார­ணங்­களும் கூறப்­ப­டு­வ­தாக இல்லை. அர­சாங்­கத்தை விட்டு விலகி எதிர்க்­கட்­சிக்கு ஆத­ரவு வழங்க முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­லமை எண்­ணி­னாலும் அதற்கு கட்­சிக்குள் இருக்­கின்ற சில உறுப்­பி­னர்கள் எவ்­வாறு தமது பிர­தி­ப­லிப்பை காட்­டு­வார்கள் என்று தலைமை சிந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கலாம். இந்தத் தேர்­த­லினால் கட்சி மீண்டும் ஒரு­முறை சித­றி­வி­டக்­கூ­டாது என்­பதில் தலைமை உறு­தி­யாக இருக்­கலாம்.

    மறு­புறம் முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்க முடிவு செய்தால் மக்கள் அதனை ஏற்­பார்­க­ளா என்ற சந்­தே­கமும் குழப்­பமும் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­மைக்கு இருக்­கலாம். எனவே, இந்தத் தேர்­தலில் முடிவு ஒன்றை எடுப்­பது அக்­கட்­சியின் தலை­மைக்கு ஒரு சவா­லான விட­ய­மா­கவே அமையும். எவ்­வா­றான முடி­வாக இருந்­தாலும் அது சமூ­கத்தின் நலன்­சார்ந்­த­தாக இருக்­க­வேண்டும் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.
    இது இவ்­வாறிருக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் என்ன செய்­யப்­போ­கின்­றது என்று அனை­வரும் கேள்­விக்­கு­றி­யுடன் பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் கட்­சிதான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை இம்­முறை தேர்­தலில் கடந்த முறை போன்று அவ­ச­ரப்­பட்டு எவ்­வி­த­மான முடி­வையும் எடுக்­காத நிலையே காணப்­ப­டு­கின்­றது.
    காரணம் கடந்த முறை எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­ததும் அதனை ஆளும் தரப்பு தனது பிர­சா­ரத்­துக்கு நன்மை பயக்கும் வகையில் பய­ன்­ப­டுத்­தி­யது. சரத் பொன்­சே­காவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் உடன்­ப­டிக்கை செய்­து­கொண்­டனர் என்று ஆளும் கட்சி சார்பில் பிர­சாரம் செய்­ய­ப்­பட்­டது. இது எதி­ர­ணிக்கு பாரிய பின்­ன­டைவை கொண்டு வந்­தது என்று கூறலாம்.
    இந்­நி­லையில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ்­வாறு எந்­த­வொரு விட­யத்­தையும் செய்து விடாமல் இருப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக ஒரு விட­யத்தை குறிப்­பி­டலாம். அதா­வது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆத­ரவு அளிக்க வேண்டும். இவ்­வாறு ஆத­ரவு வழங்­கு­வதன் மூலம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள கூடிய அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும். அந்த வகையில் தனது நேர்­மையை வெளிக்­காட்­டு­வ­தற்­காக கூட்­ட­மைப்பு இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான பஷில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமென்று நம்புகின்றோம் என அவர் கூறியிருந்தார். அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின் கோரிக்கைக்கு பதிலளித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அமைச்சரின் கூற்றை நிராகரிக்கவில்லை என்றும் ஆழமாக அது குறித்து ஆராய்வதாகவும் கூறியிருந்தார். சம்பந்தன் இவ்வாறு கூறியிருந்ததன் மூலம் இம்முறை தேர்தல் விடயத்தில் மௌனமான நிதானமான போக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேணுகின்றது என்ற விடயம் தெளிவாகியுள்ளது.

    இந்நிலையில் தேர்தல் காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மையினால் பரபரப்பான அறிவிப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்களை எதிர்பார்க்கலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் மிகவும் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
    Virakesari
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் காங்கிரசும் கூட்டமைப்பும் என்ன செய்யப் போகின்றன ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top