எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் என உரிய அதிபர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிசம்பர் மாதம் நடாத்தப்படவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விஷேட தேவைகள் உடைய விண்ணப்பதாரிகளுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

0 comments:
Post a Comment