இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 185 இலிருந்து 188 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 42 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஏனைய 140 நோயாளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment