பல்கலைக்கழக அனுமதிகளுக்கான திகதியை நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி
கொரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர்
இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற்றோர் தமது
விண்ணங்களை அனுப்பி வைக்க முடியும்.
ஏற்கனவே அறிவிக்கப்படி அரச
பாடசாலைகள் ஏப்ரல் 20ஆம் திகதி திறக்கப்பட வேண்டும். எனினும் நடப்பு
நிலவரங்களின்படி ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு வாய்ப்புக்கள்
இல்லை.
இதனையடுத்தே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பாடசாலைகள் திறக்கும் தினத்தில் இருந்து இரண்டு கிழமைகளை அவகாசமாக அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment