• Latest News

    September 13, 2014

    அரசு பலவந்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்குரிமையை கொள்ளையிடுகிறது: ஹேமகுமார நாணயக்கார

    மிகவும் அநீதியான சூழ்நிலையிலேயே ஊவா மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதாக பௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

    அரசாங்கம் முழு அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் அனுசரணையுடன் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

    ஊவாவில் இருக்கும் அப்பாவி மக்களின் ஜனநாயகத்தை அரசாங்கம் அடுப்பில் போட்டுள்ளது.
    ஏகாதிபத்திய வெள்ளையர்கள் அன்று ஊவா மக்களுக்கு கொடுத்த கஷ்டங்களுக்கு ஈடான கஷ்டங்களை அரசாங்கம் கொடுத்து கொண்டிருக்கின்றது.

    மனித உரிமை மீறியே அரசாங்கம் இந்த தேர்தலுக்கு தயாராகியுள்ளது.

    மக்களின் பலமான எதிர்ப்பு அரசாங்கத்திற்கு பேரிடியாக மாறியுள்ளதால், பலவந்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்குரிமையை கொள்ளையிடவே அரசாங்கம் தயாராகி வருகிறது எனவும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

    நோயாளிகளுக்காக சயனைட் சாப்பிடவும் தயார் - பாலித தெவரப்பெரும

    துன்புறும் நோயாளிகளுக்காக பச்சை மிளகாய் அல்ல சயனைட்டையும் சாப்பிட தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

    துன்புறும் எந்த நோயாளியாக இருந்தாலும் அவர்களுக்காக எந்த சவாலையும் ஏற்றுக்கொள்வேன்.

    அவர்களுக்காக பச்சை மிளகாய் அல்ல சயனைட்டை சாப்பிடவும் தயார்.

    உண்மையில் பச்சை மிளகாயை சாப்பிட வேண்டியது நாங்கள் அல்ல. சிறுநீரக நோய் பரவ உதவும் அரசாங்கத்தின் அமைச்சர்களே அதனை சாப்பிட வேண்டும் எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசு பலவந்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்குரிமையை கொள்ளையிடுகிறது: ஹேமகுமார நாணயக்கார Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top